என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூலைக்கரைப்பட்டியில் மனைவியுடன் தகராறில் வாலிபர் தற்கொலை
- பால கிருஷ்ணனுக்கும், மாலதிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
- மனம் உடைந்த பாலகிருஷ்ணன் கடந்த 3-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகபேரி, மேலத் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 31). இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 1 மகளும், 1 மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பால கிருஷ்ணனுக்கும், மாலதிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் மாலதி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த பாலகிருஷ்ணன் கடந்த 3-ந் தேதி மூலைக்கரைப்பட்டி வடக்கு பஜாரில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன் பின் பாலகிருஷ்ணன் மூலைக்கரை ப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






