என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் அருகே கணவருடன் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
- கிளாடிக்கும், பொன்னம்மாளுக்கும் அடிக்கடி தகராறு வருவது வழக்கம்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொன்னம்மாள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்தவர் கிளாடி. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 38). இவர்களுக்கு சுமார் 13 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கிளாடிக்கும், பொன்னம்மாளுக்கும் அடிக்கடி தகராறு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் கிளாடி அங்கிருந்து கறிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொன்னம்மாள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் பொன்னமாளை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் பொன்னம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






