என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் குழந்தையுடன் மாயம்
    X

    களக்காடு அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் குழந்தையுடன் மாயம்

    • பானுபிரியாவிற்கும்,தங்கராஜ்க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
    • தனது பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாதமாக பானுபிரியா வசித்து வந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் பானுபிரியாவிற்கும் (வயது 23), ஏமன்குளத்தை சேர்ந்த தங்கராஜ்க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து பானுபிரியா கணவர் தங்கராஜை விட்டு பிரிந்து தனது பெண் குழந்தையுடன் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாதமாக வசித்து வந்தார். கடந்த 31-ந்தேதி பானுபிரியா தனது குழந்தை மற்றும் தாயார் சமுத்திரகனியுடன் களக்காட்டிற்கு வந்தார். பின்னர் தாயாரிடம் பேன்சி பொருட்கள் வாங்கி வருவதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார். ஆனால் அதன் பின் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சமுத்திரகனி பல்வேறு இடங்களில் தேடியும் பானுபிரியா மற்றும் அவரது குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பானுபிரியாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×