என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை
    X

    பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை

    • மனைவியுடன் தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை
    • ஏற்கெனவே பலமுறை கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றவர்

    கோவை,

    கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 26). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கருப்பசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் பலமுறை கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றினர். சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கருப்பசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி யடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×