என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் தனியாக வசித்த பெண் தற்கொலை
- மகன்கள் பார்க்க வராததால் அன்னம்மாள் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.
- தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கணுவாய் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அன்னம்மாள் (வயது 55). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேரும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர்.
அன்னமாளை யாரும் பார்ப்பதற்கு வருவதில்லை. அவர் தனியாக வசித்து வந்தார். மகன்கள் பார்க்க வராததால் அன்னம்மாள் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்தார். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






