என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி மார்க்கெட்டுக் சென்ற காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை: சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போராட்டம்
- அவரது 3 சக்கர வாகனத்தின் சாவியை பிடிங்கிக் கொண்டு அடித்து விட்டதாக கூறப்படுகிறது.
- காணாமல் போன காய்கறி வியாபாரி தேவேந்திரனை தேடி வந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி ரத்தினம் பிள்ளை மார்க்கெட்டில் ஜெயபால் என்பவர் காய்கறிகடை நடத்தி வருகிறார் இவரிடம் காய்கறி வாங்கிய தாழம்பட்டை சேர்ந்த தேவேந்திரன் (வயது 45) என்பவர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் ஜெயபால், தேவேந்திரனை அசிங்கமாக திட்டி அவரது 3 சக்கர வாகனத்தின் சாவியை பிடிங்கிக் கொண்டு அடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவமானம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து விட்டேன் என்று தனது அண்ணன் மகன் மனோகருக்கு செல்போனில் தேவேந்திரன் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனோகர், தேவேந்திரன் மகன்கள் மற்றும் உறவினர்கள் பண்ருட்டியில் உள்ள காய்கறி கடைக்கு சென்று உரிமையாளரிடம் கேட்டு பார்த்தும் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பண்ருட்டி போலீசாரிடம் காணாமல் போன தேவேந்திரன் மகன் ராஜதுரை (35) புகார் அளித்தார்.
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன காய்கறி வியாபாரி தேவேந்தி ரனை தேடி வந்தனர். காணாமல் போன காய்கறி வியாபாரி தேவேந்திரன் பண்ருட்டி சென்னை சாலை எல்.என்.புரம் டி.ஆர்.வி நகருக்கு செல்லும் வழியில் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்ததை பண்ருட்டி போலீசார் கண்டுபிடித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை சாவில் சந்தேகம் உள்ளது எனக் கூறி தேவேந்திரன் உடலை வாங்க மறுத்த மகன்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது






