search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில்  வேன்  கவிழ்ந்து விபத்து
    X

    பாதாள சாக்கடை பள்ளத்தில் வேன் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து

    • தீர்த்த குளம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து மினிவேனை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
    • திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று கொண்டிருந்த தியாகி சண்முகம் பிள்ளை வீதியில் ,மூர்த்தி ஓட்டிவந்தமினிவேன் பாதாள சாக்கடையில் தலைக்குப்புற கவிழ்ந்து.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தியாகி சண்முகம் பிள்ளை வீதிக்கு ஆயில் லோடு ஏற்றுக்கொண்டு மினி வேன் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லோடு மினி வேனை திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியை சேர்ந்த மூர்த்தி ஓட்டிக்கொண்டு வந்தார்.திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. தியாகி சண்முகம் பிள்ளை வீதியில் வேன் வந்த போது பாதாள சாக்கடையில் மினி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் மூர்த்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியில் மூடப்பட்ட பள்ளத்தில் பல்வேறு வாகனங்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×