என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் பிணமாக கிடந்தவர் வழக்கில் திருப்பம்: செல்போன் பறிப்பை தடுத்த தொழிலாளி அடித்து கொலை
- பாபு பிணமாக கிடந்த இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிராகாட்சிகளை ஆய்வு செய்தனர்.
- இருதயராஜை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி:
பெரியபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது43). தொழிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி பொன்னேரி, தச்சூர் சாலை கிருஷ்ணாபுரம் மேட்டு காலனி அருகில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாபுவின் தலையில் 3 இடங்களில் தலையில் கல்லால் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பாபு பிணமாக கிடந்த இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிராகாட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பொன்னேரியை அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த இதயராஜ் என்பவர் அப்பகுதியில் செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது செல்போன் பறித்த போது தடுத்ததால் கல்லால் தாக்கியதில் பாபு இறந்துவிட்டதாக இருதயராஜ் தெரிவித்து கொலையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருதயராஜின் வீட்டில் மறைத்து வைத்திருந்த பாபுவின் செல்போனையும் பறிமுதல் செய்தனர். செல்போன் பறிப்பை தடுத்த தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






