என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தொழிலாளியின் காதை அறுத்த வாலிபர்
    X

    கோவையில் தொழிலாளியின் காதை அறுத்த வாலிபர்

    • 45 வயது தொழிலாளி மரம் அறுக்கும் தொழில் செய்து வருகிறார்.
    • இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    கோவை,

    கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்த 45 வயது தொழிலாளி. இவர் மரம் அறுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் தொழிலாளி மரம் அறுக்கும் போது கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது தொழி லாளியின் மனை விக்கு சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்த 36 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரமணாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது பொள்ளாச்சி கோட்டூர் ஜெய்பிரகாஷ் வீதியில் வாலிபருடன் மனைவி தங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தொழிலாளி அங்கு சென்று மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். அதற்கு அவர் வர மறுத்து விட்டார்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் தொழிலாளியின் இடது காதை அறுத்தார். பின்னர் அவர் தப்பி ஓடிய போது அரிவாள்மனையை தூக்கி வீசினார்.

    இதில் அவரது பின் தலையில் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ள த்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×