என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே விடுமுறையில் வீட்டிற்கு வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- தாமஸ்லிகோரி தனியார் தொலைக்காட்சியில் சென்னையில் பணி செய்து வந்தார்.
- வேப்பமரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்கு பாளையம் மெயின்ரோட்டில் வசிப்பவர் தாமஸ்லிகோரி (வயது 23). இவர் தனியார் தொலைக்காட்சியில் சென்னையில் பணி செய்து வந்தார். இந்நிலையில் விடுப்பு எடுத்துக்கொண்டு நேற்று தனது சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது பெற்றோர் அவரை தேடி சென்றபோது, அப்பகுதியில் இருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேத்தியாத்தோப்பு போலீசார், தாமஸ்லிகோரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






