search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
    X

    ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

    • வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    காவிரியில் இருந்து ஈரோடு வரும் ரெயில் பாதையில் வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை.

    கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது அவ்வழியே வந்த ரெயில் மோதி சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×