search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
    X

    மேல்மலையனூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

    • மேல்மலையனூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • 60 கிராம் கஞ்சாவை யும் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே நெகனூர் கிராமத்தில் வளத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வ நாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படி யான நபர் நின்று கொண்டி ருந்தார். போலீசார் அந்த நபரை விசாரித்தபோது சிறுகடம்பூர், மேட்டுப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் முருகன் (19) என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரைகைது செய்து 60 கிராம் கஞ்சாவை யும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×