search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வீடு புகுந்து மோட்டார்சைக்கிளை திருட முயன்ற வாலிபர்
    X

    கோவையில் வீடு புகுந்து மோட்டார்சைக்கிளை திருட முயன்ற வாலிபர்

    • மோட்டார்சைக்கிளை திருடிய காட்சி அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.
    • வாலிபர் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர் வீட்டின் கதவை திறந்து மோட்டார்சைக்கிளை திருட முயன்றார். வாகனம் பூட்டு போட்டு இருந்ததை கண்டு திரும்பிய வாலிபர் அப்பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களையும் திருட முயன்றார்.

    இந்த சம்பவம் அங்கிருந்து கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் உள்ள நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பொதுமக்கள் வீடுகளிலும், தெருக்களிலும் பொது இடங்களிலும் கண்காணிப்பு காமிமராக்களை பொருத்த வேண்டும். கோடை காலம் என்பதால் வீடுகளை திறந்து வைத்து உறங்க வேண்டாம். வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை பூட்டி விட்டு செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×