என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ேகாவையில் பள்ளி மாணவியின் பாட்டியை மிரட்டிய வாலிபர்
- திருமணம் செய்து வைக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கினார்
- பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 52 வயது பெண். கூலி வேலை செய்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து நான் எனது மகன் மற்றும் 14 வயது பேத்தியுடன் வசித்து வருகிறேன். எனது பேத்தி எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் என்னிடம் வந்து உனது பேத்தியை மிகவும் பிடித்துள்ளது, நான் பெண் கேட்டு வருகிறேன். திருமணம் செய்து வை என மிரட்டல் தொனியில் கூறி விட்டுச் சென்றார். நான் பிரச்சினை எதுவும் செய்யக் கூடாது என அமைதியாக சென்று விட்டேன்.
சம்பவத்தன்று நான் வேலைக்கு புறப்பட்டு சென்றேன். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் மீண்டும் என்னிடம் வந்து தகராறு செய்தார். அதற்கு நான் எனது பேத்தி பள்ளியில் படித்து கொண்டு இருக்கிறாள். எங்களை தொந்தரவு செய்யாதே என்றேன். ஆத்திரம் அடைந்த அவர் என்னை கன்னத்தில் தாக்கி கீழே தள்ளினார். பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி எனது பேத்தியை திருமணம் செய்து கொடுக்க வில்லை என்றால் என்னை கொன்று விட்டு திருமணம் செய்து கொள்வதாக மிரட்டி அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
எனவே என்னை பெண் என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் வைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேத்தியை திருமணம் செய்து வைக்க மறுத்த பாட்டியை தாக்கிய வாலிபர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்