என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்
- திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வல்லுறவு
- வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் தொழிலாளியிடம் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடுமலை அருகே உள்ள பூக்களத்தை சேர்ந்த 19 வயது கூலித் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
கடந்த 29-ந் தேதி சிறுமி தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது அவரை அவரது காதலன் திருமண ஆசை காட்டி கடத்தி சென்றார். பின்னர் வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்தார்.
சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வாலிபருடன் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு வால்பாறை அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்