search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற வாலிபர்
    X

    கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற வாலிபர்

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தூத்துக்குடிக்கு அழைத்து சென்றது அம்பலம்
    • மாயமான மகளை மீட்டு தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார்

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 18-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரியில் இருந்து சுற்றுலா செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாணவியின் செல்போனுக்கு அவரது பெற்றோர் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை மீட்டு தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கும், தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. வாலிபர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை தூத்துக்குடிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் மாணவியை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×