என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற வாலிபர்
- திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தூத்துக்குடிக்கு அழைத்து சென்றது அம்பலம்
- மாயமான மகளை மீட்டு தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார்
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 18-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரியில் இருந்து சுற்றுலா செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாணவியின் செல்போனுக்கு அவரது பெற்றோர் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை மீட்டு தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கும், தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. வாலிபர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை தூத்துக்குடிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் மாணவியை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்