என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் 17 வயது சிறுமியை கேரளாவுக்கு கடத்தி சென்ற வாலிபர்
- என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு சென்றதால் பரபரப்பு
- வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியிடம் திரு மணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கேரளாவுக்கு கடத்தி சென்றார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் சிறுமி இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் எந்த பலனும் இல்லை.
அப்போது சிறுமி அவரது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு தான் கேரள மாநிலம் வடக்கஞ்சேரிக்கு வாலிபருடன் வந்து விட்டதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்