என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்தில் வாலிபர் பலி
- எதிர்பாராத விதமாக பஸ் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை காந்தி நகர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மகன் நிரஞ்சன் (20) இவர் அவிநாசி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவினாசி ரோடு பீளமேடு சாலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பள்ளி பஸ் வந்தது. இந்த பஸ்சை கோவை குமாரபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(41) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நிரஞ்சன் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






