என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.ஜி.சாவடி அருகே பஸ்சின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
    X

    கே.ஜி.சாவடி அருகே பஸ்சின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

    • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் வலது புறத்தில் மோதியது.
    • ராய் ஜார்ஜ் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கோவை,

    கேரள மாநிலம் கோட்டயம் மட்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராய் ஜார்ஜ்(வயது21).

    இவர் தனது காதலியான 18 வயது இளம்பெண்ணுடன் கோவையில் இருந்து கேரளா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மோட்டார் சைக்கிள் சேலம்-பாலக்காடு ரோட்டில் கே.ஜி.சாவடி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் வலது புறத்தில் மோதியது. மோதிய வேகத்தில், அருகே சென்ற கார் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ராய் ஜார்ஜூம், அவரது காதலியும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். ராய் ஜார்ஜ் பஸ்சின் சக்கரத்தின் அருகே விழுந்ததில் பஸ்சின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ராய்ஜார்ஜின் காதலி படுகாயத்துடன் வலியால் துடித்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான ராய் ஜார்ஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    Next Story
    ×