என் மலர்
உள்ளூர் செய்திகள்

முக்கூடல் அருகே மனைவியுடன் தகராறில் வாலிபர் தற்கொலை
- இசக்கிராஜாவுக்கு ஜெபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- போலீசார் இசக்கிராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
முக்கூடல் அருகே உள்ள பனையங்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கிராஜா (வயது 37). இவருக்கு ஜெபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இசக்கிராஜா டிராக்டர் ஓட்டும் வேலை பார்த்து வந்தார். ஜெபா தனியார் பீடிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த இசக்கிராஜா திடீரென தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பாப்பாக்குடி போலீசார் இசக்கிராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த இசக்கிராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






