என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோமங்கலம் அருகே தேர்வு எழுத மறுத்த மாணவி - பெற்றோர் வற்புறுத்தலால் தற்கொலை
- மனவேதனை அடைந்த காவியா வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷத்தை குடித்தார்.
- கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலத்தை சேர்ந்தவர் மாசாணி. இவரது மகள் காவியா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். தேர்வு முடிவில் காவியா கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார். பின்னர் படிக்க செல்லாமல் ஆடு மேய்த்து வந்தார்.
இந்தநிலையில் காவியா தனது பெற்றோரிடம் டுட்டோரியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதாக கூறினார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் உடுமலையில் உள்ள டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்து விட்டனர். கடந்த 28-ந் தேதி நடந்த கணித தேர்வை காவியா எழுதினார். இன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு எழுத மாட்டேன் என அவர் தனது பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவரது பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த காவியா வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷத்தை குடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக காவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் காவியா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






