search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார்  எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை 1,483 மையங்களில் நடக்கிறது
    X

    நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை 1,483 மையங்களில் நடக்கிறது

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம்
    • முகாமில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிறப்பு முகாம்

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. முகாமில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    பொதுமக்கள் தங்கள் முகவரிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்று அங்கு பணியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம் 6 பி பூர்த்தி செய்து தங்களது ஆதார் அட்டை விவரங்களை முன்வந்து http://www.nvsp.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது Play store-ல் Voter's Help Line App-ஐ பதிவிறக்கம் செய்து ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம்.

    இந்த வாய்ப்பினை தகுதி உள்ள அனைவரும் பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×