என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் மயங்கி விழுந்து சாவு
Byமாலை மலர்21 Jun 2023 8:50 AM GMT
- நிலை தடுமாறி சாலையில் மயங்கி விழுந்த ராமசந்திரன் இறந்தார்.
- ராமசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் பிடாகம் நத்தபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 66) ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர். இந்நிலையில் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி வழியாக சென்றார். அப்போது திடீரென அவருக்கு வழிப்பு ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி சாலையில் மயங்கி விழுந்த ராமசந்திரன் இறந்தார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X