search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் மயங்கி விழுந்து சாவு
    X

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் மயங்கி விழுந்து சாவு

    • நிலை தடுமாறி சாலையில் மயங்கி விழுந்த ராமசந்திரன் இறந்தார்.
    • ராமசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் பிடாகம் நத்தபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 66) ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர். இந்நிலையில் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி வழியாக சென்றார். அப்போது திடீரென அவருக்கு வழிப்பு ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி சாலையில் மயங்கி விழுந்த ராமசந்திரன் இறந்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×