என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரமடை அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளை
- தியாகராஜன் காரில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிலியூர் தோலம்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 48). ரியல் எஸ்டேட் அதிபர். சம்பவத்தன்று இவர் தொழிலில் அவருக்கு கமிஷனாக வந்த ரூ.1.80 லட்சம் பணத்தை காரில் வைத்தார். பின்னர் மேட்டுப்பாளையம் செல்வபுரத்தில் உள்ள நண்பர் செந்தில்குமார் என்பவரது வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது தியாகராஜன் காரை நண்பரின் வீட்டு முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
அப்போது யாரோ மர்மநபர் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை கொள்யைடித்து தப்பிச் சென்றனர்.
திரும்பி வந்து பார்த்த தியாகராஜன் காரில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்த னர்.
இது குறித்து ரியஸ் எஸ்டேட் அதிபர் தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






