search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக வீட்டில் வைத்து வெடி தயாரித்த ஒருவர் கைது
    X

    வீட்டில் வெடி பொருட்கள் தயாரித்தவரை கைது செய்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சட்டவிரோதமாக வீட்டில் வைத்து வெடி தயாரித்த ஒருவர் கைது

    • மணப்படையூர் கிராமத்தில் அரசு உரிமை பெற்று வெடி கடையை நடத்தி வருகிறார்.
    • வெடி தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி ரெயில்வே கேட் சாலையில் வசிப்பவர் ஜேசுதாஸ் (வயது 45).

    இவர் சுவாமிமலை அருகே மணப்படையூர் கிராமத்தில் அரசு உரிமை பெற்று வெடி கடையை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக அவரது வீட்டில் வெடி தயாரிக்கும் பணி மேற்கொள்வதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்து வெடிகள் மற்றும் வெடி தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை பறிமுதல் செய்து ஜேசுதாஸை கைது செய்தனர்.

    Next Story
    ×