

நெல்லை:
சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கருத்தபாண்டி என்ற கண்ணன் (வயது 44).இவர் மீது திருட்டு, அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி கண்ணன் மீது குண்டர் சட்டத்தில் கீழ் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் கைது செய்து பாளை மத்திய சிறை அடைத்தார்.