search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடி அருகே லாரியில் அதிக அளவு குண்டு கற்களை ஏற்றி வந்தவர் கைது
    X

    பணகுடி அருகே லாரியில் அதிக அளவு குண்டு கற்களை ஏற்றி வந்தவர் கைது

    • அழகுசுந்தரம் ஒட்டி வந்த டாரஸ் லாரியை பணகுடி வருவாய் ஆய்வாளர், உதவி கலெக்டர் ஆகியோர் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • லாரியில் அதிக அளவு குண்டு கற்களை ஏற்றி வந்தது சோதனையில் தெரியவந்தது.

    வள்ளியூர்:

    தெற்கு வள்ளியூர் பகுதியில் பணகுடி வருவாய் ஆய்வாளர் அழகு முத்து ரேகா மற்றும் உதவி கலெக்டர் கிஷோர் குமார் (பயிற்சி) ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மருதப்பபுரம், தெற்கு தெருவை சேர்ந்த அழகுசுந்தரம் (வயது41) என்பவர் ஒட்டி வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கொண்ட குண்டு கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பணகுடி வருவாய் ஆய்வாளர் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப் படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அழகுசுந்தரத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×