என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அன்னூர் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி கூலித்தொழிலாளி பலி
- பேக்கரி கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார்
- தூக்கி வீசப்பட்டதில் லாரியிலும் சிக்கி தலை நசுங்கிய பரிதாபம்
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் புதுகாலனியை சேர்ந்தவர் சின்னமுத்தான் (வயது63).
இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சின்னமுத்தான், தனது நண்பரான குட்டாரபாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடன் அங்குள்ள மின் மயானம் அருகே பேசி கொண்டிரு ந்தனர்.அப்போது சின்னமுத்தான் அருகே உள்ள பேக்கரி கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார்.
அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் எதிர்பாராதவிதமாக சின்னமுத்தான் மீது மோதியது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டது.
அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இறந்த சின்னமுத்தானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்