search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானை விரட்டும் பணியின் போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வனத்துறை வாகனம்
    X

    யானை விரட்டும் பணியின் போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வனத்துறை வாகனம்

    • ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு வாகனம் மீட்பு
    • யானை கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமத்துக்குள் நேற்று இரவு 6 காட்டு யானைகள் நுழைந்தது.

    இதனை பார்த்த கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனச்சரகர் சவுந்தர்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் பச்சாப்பாளையம்- கரடிமடை இடையே ஊருக்குள் புகுந்திருந்த யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வனத்துறையி னரின் வாகனம் சிறிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடி யாக ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் விழுந்த வனத்துறை வாகனம் மீட்கப்பட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு, யானை கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டி விட்டனர்.

    Next Story
    ×