என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடத்தில் திடீர் தீ விபத்து
    X

    கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடத்தில் திடீர் தீ விபத்து

    • ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்
    • கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் பழனிச் சாமி (வயது 62). இவர் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் விசைத்தறி கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று மாலை சுமார் 6:30 மணி அளவில் விசைத்தறி கூடத்தின் மேல் பகுதியில் திடீரென மின்க சிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.இதனை பார்த்த விசைத் தறி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

    தகவலின்பேரில் சூலூர் தீயணைப்பு நிலைய அதி காரி வேலுச்சாமி தலை மையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3 நவீன விசைத்தறி கூடங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த நூல் பண்டல்கள் உள்பட ஒரு கோடி மதிப்புள்ளான பொருட்களும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.

    இதுகுறித்து விசைத்தறி கூட மேலாளர் லோகநாதன் கூறுகையில், தொழிலா ளர்கள் வழக்கமாக பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தொழிலா ளர்களை வெளியேறி தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான விசைத்தறி மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து சேத மாகி உள்ளது என தெரி வித்தார். இந்த தீவிபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், கரு மத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் விசைத்தறிக்கூடங்கள், நூல் மில்கள், தொழில் கூடங்கள் அதி களவில் உள்ளன. எனவே இந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.

    சூலூர், அவிநாசி மற்றும் கோவை ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள், பஞ்சு நூல்கள் முற்றிலும் எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைகின்றன. எனவே கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×