search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளியனூர் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி லாரி மோதி பலி
    X

    கிளியனூர் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி லாரி மோதி பலி

    • காத்தவராயன் (வயது 55). விவசாயி. இவர் புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் காட்ராம்பாக்கம் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக வந்த லாரி இவர் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட விவசாயி காத்தவராயன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானர்


    விழுப்புரம்:

    வானூரை அடுத்த காட்ராம்பாக்கத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 55). விவசாயி. இவர் புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் காட்ராம்பாக்கம் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக வந்த லாரி இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட விவசாயி காத்தவராயன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானர். இத்தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் காத்தவராயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×