search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூரில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மூச்சுத் திணறி சாவு
    X

    திருவெண்ணைநல்லூரில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மூச்சுத் திணறி சாவு

    • ரவி ஊரணி கிணற்றில் கால் கழுவ சென்றுள்ளார்.
    • திடீரென நிலை தடுமாறிய அவர், கிணற்று நீரில் விழுந்து மூச்சுத் திணறி இறந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் தெற்குவீதியியை சேர்ந்தவர் ரவி (வயது 55). விவசாயி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி சென்னையில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இவரது மகன் கார்த்திக் (35) வீட்டில் இவரது மனைவி தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்ற ரவி, அருகில் இருந்த ஊரணி கிணற்றில் கால் கழுவ சென்றுள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறிய அவர், கிணற்று நீரில் விழுந்து மூச்சுத் திணறி இறந்தார். சிறிது நேரத்தில் தற்செயலாக அங்கு சென்ற கிராம மக்கள் இதனைக் கண்டனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் வினோ த்ராஜ் தலைமையிலான போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×