என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை அருகே  மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
    X

    ஆனைமலை அருகே மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

    • திருமணமாகாத விரக்தியில் மது பழக்கத்துக்கு அடிமையானர்
    • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 43). மாற்றுத்திறனாளியான இவர் அந்த பகுதியில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கனகராஜ் திருமணத்துக்காக பல இடங்களில் பெண் பார்த்தார். ஆனால் அவர் மாற்றுத்திறனாளி என்பதால் எந்த பெண்ணும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் மது பழக்கத்துக்கு அடிமையானர்.

    சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டில் தனியாக இருந்த அவர் திருமணமாகாத விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×