search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணத்துக்கடவு அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
    X

    கிணத்துக்கடவு அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

    • சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார்.
    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    பொள்ளாச்சி,

    சேலம் மாவட்டம் ஒமலூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது47). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அண்மையில் நடந்த வாகன விபத்தில் சுப்பிரமணியின் மனைவி இறந்து விட்டார்.

    இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுப்பிரமணி தனது மகன்களுடன், கோவை கிணத்துக்கடவு அருகே வடக்குபாளையம் கோபாலபுரத்திற்கு வந்தார்.

    அங்கு தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார். அவருடன் அவரது நண்பரான ராமு (46) என்பவரும் சென்றார். இவரும் கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    மோட்டார் சைக்கிளை ராமு ஓட்ட, சுப்பிரமணி பின்னால் அமர்ந்து இருந்தார். கோவில்பாளையம் சென்று இ-சேவை மையத்தில் பணத்தை அனுப்பி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது பொள்ளாச்சி-கோவை சாலையில் எஸ்.மேட்டுப்பாளையம் அருகே வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    இதில், ராமு, சுப்பிரமணி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி சாலையில் வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ராமு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    ெதாடர்ந்து பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×