search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர்  மீது  வழக்கு
    X

    பண்ருட்டி அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

    • பண்ருட்டி அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
    • கலைச்செல்வியையும் கத்தியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கீழகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் மகன் ராஜ்குமார் (வயது 23). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் ஆதிகுரு இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக மது அருந்தும் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவருக்குள்ளும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு ஆதிகுரு நேற்று இரவு அவரது நண்பர்களுடன் ராஜ்குமார் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது தாய் கலைச்செல்வியையும் கத்தியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இச்சம்பவத்தில் ராஜ்குமாருக்கு கை, காது, தலை அவரது தாய் கலைச்செல்விக்கு கை, வயிறு, தலை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதிகுருவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×