search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பத்தில் கார் மோதி விபத்து  83 வயது முதியவர் பலி.
    X

    மின் கம்பத்தில் கார் மோதி விபத்து 83 வயது முதியவர் பலி.

    • ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள ஜே. கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 83). சம்பவத்தன்று இவர் திருப்பூரை சேர்ந்த தங்கராஜ் (36) என்பவரது காரில் முன்னால் அமர்ந்து சென்றார். கார் பல்லடம் - உடுமலை ரோட்டில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சுல்தான் பேட்டை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×