என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீஸ் நிலையம் அருகே நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
- வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது.
- காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா ?
விழுப்புரம்:
விக்கிரவாண்டி போலீஸ் நிலைய வீதியை சேர்ந்தவர் முகமது ஷாலி (வயது 52). பழைய பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரில் வியாபாரம் நிமித்தமாக நேற்று காலையில் வெளியில் சென்றார். பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த முகமது ஷாலியை எழுப்பி தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விக்கிரவாண்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த விக்கிவாண்டி போலீசார், காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்