என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் 2 நாள் நடந்த ஸ்டார்ட்-அப் திருவிழா
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி மூலமாக விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
- 23 பேருக்கு ரூ.3 கோடிக்கு முதலீட்டு ஆதாரத்தொகை வழங்கப்பட்டது.
கோவை,
தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் 'தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்' திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி மூலமாக விழாவை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சி யில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. தொழில்துறையில் சாதனை படைத்த வல்லுனர்கள் சிறப்புரையாற்றினர். பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
கண்காட்சி வளாகத்தில் 450-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், அரங்குகள் அமைந்திருந்தன. முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.மருத்துவ அவசர காலங்களில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கான அதிநவீன டிரோன், மாற்றுத்திறனாளி களுக்கான நவீன வாக னங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படும் வகையில் பொருட்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன.
ஸ்டார்ட்-அப் திருவிழா வில் 23 பேருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மொத்தம் ரூ.3 கோடிக்கு முதலீட்டு ஆதார தொகை வழங்கப்பட்டது. 20 பெண் தொழில் முனைவோர்களுக்கு தொழில் விரிவாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 10 ஆயிரத்தி ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்ப ட்டது.தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் அருண்ராய், தமிழ்நாடு 'ஸ்டார்ட் அப்' இன்னே ாவேசன் திட்ட இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.






