search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் கட்டுவதில் அண்ணன், தம்பி இடையே மோதல்: 8 பேர் காயம்
    X

    கோவில் கட்டுவதில் அண்ணன், தம்பி இடையே மோதல்: 8 பேர் காயம்

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). இவர் தனது வீட்டின் அருகே சிறிய கோவில் கட்டி வருகிறார்.அப்போது இவரது தம்பி கண்ணன், பொது பாதையில் ஏன் கோவில் கட்டுகிறார்கள் என கேட்டபோது, 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஜெயபால், செல்வமூர்த்தி, சிவமூர்த்தி, சுந்தரமூர்த்தி, கண்ணன், கருணாமூர்த்தி, கார்த்தி, நந்தகோபால் ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் கண்ணன், நந்தகோபால், கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, ஆகியோர் மீதும், கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயபால், செல்வமூர்த்தி, ஜெயமூர்த்தி, சுந்தரமூர்த்தி, சிவமூர்த்தி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×