என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் நீட் தேர்வை 7,127 பேர் எழுதுகிறார்கள்
- நாளை(ஞாயிற்றுகிழமை) 9 மையங்களில் நடக்கிறது
- தேர்வின் போது தேர்வர்கள் அனைவரும் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள்.
கோவை,
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 7-ந் தேதி நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி கோயமுத்தூர் பப்ளிக் பள்ளி, விகேகம் சீனியர் செகண்டரி பள்ளி, புலியகுளம் ரோடு வித்யா நிகேதன் பள்ளி, வட்டமலை பாளையம் கங்கா நர்சிங் கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் அகாடமி, சிங்காநல்லூர் எஸ்.எஸ்.வி.எம்.வேர்ல்டு பள்ளி, திருச்சி ரோடு ரத்தினம் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, சவுரி பாளையம் ரோடு கேந்திர வித்யாலயா பள்ளி, நேரு நகர் சுகுணா பிப்பள்ளி ஆகிய 9 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது.கோவை மாவட்டத்தில் மொத்தம் 7,127 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். இதில் அரசு பள்ளியில் இருந்து 166 மாணவ- மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து 42 மாணவ-மாணவிகள் என 208 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறுகிறது.
தேர்வு எழுத வருபவர்கள் மதியம் 1.15 மணிக்கு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணி முதல் 1.45 மணிவரை முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கி நுழைவு சீட்டு சரிபார்க்கப்படும்.
மதியம் 1.45 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்த மொழியில் தேர்வை எழுதலாம். நுழைவு சீட்டு, அடையாள சான்று தவிர வேறு எந்த ஆவணங்களையும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
எழுது பொருட்கள், கால்குலேட்டர், பென்சில் பாக்ஸ், பென் டிரைவ், அழிப்பான்கள், செல்போன், புளூடூத், இயர்போன் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாட்ச் பேக், பெல்ட், தொப்பி அணிய கூடாது. மேலும் ஆண் தேர்வர்கள் முழு ஸ்லீவ் சட்டைகள் அணிய கூடாது. அரை ஸ்லீப் சட்டை மட்டுமே அணிய வேண்டும். குர்தா, பைஜாம் அனுமதி இல்லை. செருப்பு அணிய கூடாது. சட்டையில் பாக்கெட் இருக்க கூடாது.
பெண் தேர்வர்கள் எம்பிராய்டரி, பூக்கள், பட்டன்களை கொண்ட ஆடை, முழு கை நீள ஸ்லீவ் ஆடை அணிய கூடாது. அரை ஸ்லீப் ஆடை அணிய வேண்டும்.
ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். லெக்கிங்ஸ் அணிய அனுமதி இல்லை. தேர்வு அறைக்குள் செருப்பு அணிய தடை. மேலும் தேர்வர்கள் காதணிகள், மூக்குத்திகள், மோதிரங்கள், பதக்கங்கள், நெக்லஸ்கள், பிரேஸ்லெட், கொலுசு போன்ற எந்த வகையான நகைகளையும் அணிய கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தேர்வின் போது தேர்வர்கள் அனைவரும் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள். நீட் ஹால்டிக்கெட், பாஸ்போர்ட் அளவுக்கு ஒரு புகைப்படம், புகைப்ப டத்துடன் கூடிய ஆதார் போன்ற அடையாள அட்டை ஆகியவற்றை தேர்வர்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்