search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இளம்பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
    X

    கோவையில் இளம்பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

    • சுகுணா வீட்டுக்குள் மர்மநபர்கள் 3 பேர் அத்துமீறி நுழைந்தனர்.
    • போலீசார் நாகேந்திரனை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை இருகூரை சேர்ந்தவர் செல்வன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுகுணா (வயது 39).

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் மர்மநபர்கள் 3 பேர் அத்துமீறி நுழைந்தனர்.

    அவர்கள் சுகுணாவிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறல் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.

    இதுகுறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணிடம் நகை பறித்தது வேதாரண்யத்தை சேர்ந்த நாகேந்திரன்(39) மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நாகேந்திரனை கைது செய்தனர். தலைமறைவான மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×