என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் 2 பெண்களிடம் 6 பவுன் நகை பறிப்பு
- மல்லிகா பள்ளியில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.
- 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர்.
கோவை,
கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி மல்லிகா(வயது57). இவர் தேவாங்கபேட்டையில் உள்ள பள்ளியில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மல்லிகா வேலைக்கு செல்வதற்காக பஸ்சில் தேவாங்கபேட்டை சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் மல்லிகா கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் நாராயணசாமி.இவரது மனைவி பிரேமலதா(57). சம்பவத்தன்று இவர் அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பிரேமலதா கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.






