என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது- ரூ.3,400 பறிமுதல்
- சங்ககிரி பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக சங்ககிரி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
- 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 3,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சங்ககிரி:
சங்ககிரி பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக சங்ககிரி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ராமன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் போலீசாருடன் அப்பகுதிக்கு சென்று சோதனை யிட்டனர். அப்போது, சூதாட்டம் விளையாடிக கொண்டிருந்த அப் பகுதியைச் சேர்ந்த சந்திரபோஸ் (வயது 44), நலப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்த மணி (27), அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (28), ராஜேந்திரன் (35), விஜயகுமார் (31), குப்ப னூரை சேர்ந்த நவீன் (28) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 3,400 ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






