search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி உள்பட 2 பெண்களிடம் 6½ பவுன் செயின் பறிப்பு
    X

    மூதாட்டி உள்பட 2 பெண்களிடம் 6½ பவுன் செயின் பறிப்பு

    • நகை கடைக்கு சென்றார்.
    • மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    வடகோவை அருகே உள்ள ராமசாமி ரோட்டை சேர்ந்தவர் கட்டபொம்மன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 69).

    சம்பவத்தன்று இவர் உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்றார்.

    அப்போது சரஸ்வதி தான் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி தனது கைப்பையில் வைத்து இருந்தார். கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் சரஸ்வதியின் கைப்பையில் இருந்த 3 பவுன் செயினை திருடி சென்றனர்.

    இது குறித்து அவர் பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் கைப்பையில் இருந்த 3 பவுன் தங்க செயினை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    பெரியகுழியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கவிதாமணி (41). சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் பெரியக்கடை வீதியில் உள்ள நகை கடைக்கு சென்றார்.

    பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக பிரகாசம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது யாரோ மர்மநபர் கவிதாமணி கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த கவிதாமணி இது குறித்து பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×