search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுவடைக்கு தயாரான 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தது
    X

    சூறாவளி காற்றால் சாய்ந்து விழுந்துள்ள வாழை மரங்கள்.

    அறுவடைக்கு தயாரான 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தது

    • 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன.
    • சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளான ஆச்சனூர், மருவூர், வடுககுடி ஆகிய இடங்க ளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. சூறாவ ளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது,

    இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரம் வேரோடு சாய்ந்தும் முறிந்ததில் 5000 வாழைகள் சேதமடைந்துள்ளன.

    இயற்கை இடர்பாடின் காரணமாக திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் மூன்றாவது முறையாக அடித்த சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளை அனுப்பி சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதுபோல் வாழை மரத்திற்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    Next Story
    ×