search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உள்பட 3 பேரிடம் 5 பவுன்  நகை, ரூ.67 ஆயிரம் பணம் திருட்டு
    X

    பெண் உள்பட 3 பேரிடம் 5 பவுன் நகை, ரூ.67 ஆயிரம் பணம் திருட்டு

    • யாரோ மர்மநபர் நித்யா கைப்பையில் வைத்து இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனை திருடி தப்பிச் சென்றனர்.
    • இதுகுறித்து குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை

    கோவை சின்னதடாகத்தை சேர்ந்தவர் நித்தியா (வயது 32). கூலி தொழிலாளி. இவர் நேற்று டவுன் பஸ்சில் துடியலூரில் இருந்து டவுன்ஹால் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் நித்யா கைப்பையில் வைத்து இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனை திருடி தப்பிச் சென்றனர். இது நித்தியா பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புலியகுளம் பஜார் வீதியை சேர்ந்தவர் கமலம் (62). வீட்டு வேலை செய்து வருகிறார் . இவர் நேற்று டவுன் பஸ்சில் தனது வீட்டில் இருந்து வரதராஜா மில்லுக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை பறிந்து சென்றனர். இது குறித்து கமலம் கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பீளமேட்டை சேர்ந்தவர் குப்புசாமி (67). இவர் நேற்று டவுன் பஸ்சில் பீளமேட்டிலிருந்து சித்ராநோக்கி சென்றார். அப்போது குப்புசாமி பாக்கெட்டில் வைத்து இருந்த ரூ.16 ஆயிரத்தை யாரோ திருடி சென்றனர். இதுகுறித்து குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×