search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் - நெல்லை மாவட்டத்தில்  5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் - நெல்லை மாவட்டத்தில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    • இட்டமொழியை சேர்ந்த கதிரேசன் (23) என்பவர் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரைத்தனர்.

    நெல்லை:

    கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் உலகுராஜ் (வயது 23), குமார் (20).

    முன்னீர்பள்ளம் மேலச்செவல் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்துராஜ் என்ற முத்து (42).

    இவர்கள் 3 பேரும் அடி-தடி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல் திசையன்விளை அருகே இட்டமொழியை சேர்ந்த கதிரேசன் (23) என்பவர் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ் (21). என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரைத்தனர்.

    அதன்பேரில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் சம்பந்தப்பட்ட 5 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×