search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூரில் பள்ளி ஆசிரியர்- கோவிலில் 4½ பவுன் நகை கொள்ளை
    X

    அன்னூரில் பள்ளி ஆசிரியர்- கோவிலில் 4½ பவுன் நகை கொள்ளை

    • பாலகிருஷ்ணன் தனியார் பள்ளி ஆசிரியரராக வேலை பார்த்து வருகிறார்.
    • பீரோவில் வைத்திருந்த 1½ சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, எல்.இ.டி. டி.வி. ஆகியவை மாயமாகி இருந்தது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீவாரி வெற்றி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). தனியார் பள்ளி ஆசிரியர்.

    நேற்று காலை பாலகிருஷ்ணன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார். அவரது மனைவி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் மாலை பள்ளி முடிந்து பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 1½ சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, எல்.இ.டி. டி.வி. ஆகியவை மாயமாகி இருந்தது.

    இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் சென்று தங்க நகை மற்றும் டி.வி.யை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பாலகிருஷ்ணன் அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.மேலும்,அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே செல்லனூரில் மகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தங்கராசு என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி அம்மன் கழுத்தில் இருந்த நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×