search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கஞ்சாவுடன் 4 பேர் கைது
    X

    தூத்துக்குடியில் கஞ்சாவுடன் 4 பேர் கைது

    • யோகராஜ் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கஞ்சா, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் நகரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 7-வது தெருவை சேர்ந்த யோகராஜ் (வயது 34), கே.டி.சி.நகர் ஹவுசிங்போர்டு ராம்குமார் (26) ரஹமத்துல்லாபுரம் அப்துல்கலாம்( 25) சுல்தான் அலாவுதீன்( 24) ஆகிய 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா, மற்றும் ரூ.2,800 பணம், அவர்கள் பயன்படுத்திய 4 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×