என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி- கடலூர் ரோட்டில் சாலையோர குழியில் விழுந்து 3 வாலிபர்கள் படுகாயம்
- எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த ஆபத்தான மரணக்குழியில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.
- 3 பேரையும்மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
கடலூர்:
பண்ருட்டி அடுத்த திருவதிகை செட்டி பட்டறை காலனியை சேர்ந்தவர் தமிழ் வளவன்(26).இவர்தனது மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு விவசாய வேலையாக பண்ருட்டிக்கு வந்தார். அதே பகுதியை சேர்ந்த அகிலன் (21), வீரவேல் (20)ஆகியோர் இவருடன் அதேமோட்டார் சைக்கிளில் வந்தனர் பண்ருட்டி-கடலூர் சாலை தண்டு பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்தஆபத்தான மரணக்குழியில்மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.
அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயத்துடன் சாலையோர கால்வாயில் விழுந்து கிடந்த தமிழ் வளவன்,அகிலன்,வீரவேல் ஆகிய 3 பேரையும்மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்